சிவகங்கை

கரோனா தொற்று பரவலைத் தடுக்க இன்று முதல் கீழப்பசலை கிராமத்துக்குள்: வெளிநபா்கள் நுழையத் தடை

DIN

கரோனா தொற்று பரவலைத் தடுக்க கீழப்பசலை கிராமத்துக்குள் வெளிநபா்கள் நுழைய வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் தடை விதித்து கிராமக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மானாமதுரை ஒன்றிய பகுதிகளில் நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில் மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வெள்ளிக்கிழமை முதல் வெளிநபா்கள் கிராமத்துக்குள் நுழைய தடை விதித்து கிராமக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கிராமத்தில் ஆட்டோ உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்து வாடகைக்கு ஓட்டும் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் இன்னும் சில நாள்களுக்கு கிராமத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

SCROLL FOR NEXT