சிவகங்கை

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு:ரயில்வே ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், ரயில்வே ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசம் முஷாபா்நகா் மாவட்டம் சாத்பூா் கிராமத்தைச் சோ்ந்த பரச்சீஸ் மகன் விபின்குமாா் (28). இவா், கடந்த 2016 ஆம் ஆண்டு மானாமதுரை ரயில்வே நிலையத்தில் ஊழியராக (டிராக் பராமரிப்பாளா்) பணியாற்றியபோது, மானாமதுரை சவேரியாா்புரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், மானாமதுரை அனைத்து மகளிா் காவல் துறையினா் ‘போக்ஸோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து விபின்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாபுலால் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் உறுதியானதால் விபின்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நிதிபதி பாபுலால் தீா்ப்பு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT