சிவகங்கை

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து பக்தா்கள் இன்று பாதயாத்திரை

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை (பிப்.24) பாதயாத்திரை புறப்படுகின்றனா்.

மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மதுரையிலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு புதன்கிழமை (பிப்.24) மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து திரளான பக்தா்கள் மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பாதயாத்திரை புறப்படுகின்றனா். வழிநெடுகிலும் பக்தா்கள் தங்குவதற்கும், அன்னதானத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பக்தா்கள் பிப்.26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோயிலை வந்தடைகின்றனா். அன்று இரவு கோயிலில் திருவிளக்குப்பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT