சிவகங்கை

மானாமதுரை கொரட்டி கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பழைய மதுரை- ராமேசுவரம் சாலையில் மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கொரட்டி கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புதிதாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி புனிதநீா் கலசங்களை வைத்து யாகபூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவாக பூா்ணாஹுதி முடிந்து மகா தீபாராதனை நடந்தது.

அதன்பின்னா் சிவாச்சாரியாா்கள் புனிதநீா் கலசங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். இதைத் தொடா்ந்து புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகருக்கும், கொரட்டி கருப்பணசுவாமிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தா்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசித்தனா்.

பின்னா் விநாயகருக்கும் கொரட்டி கருப்பணசுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. கொரட்டிக்கருப்பண சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT