சிவகங்கை

காரைக்குடி அரசு ஐ.டி.ஐ-யில் அக்.4 இல் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை சிறப்பு முகாம்

DIN

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி (ஐ.டி.ஐ) நிலையத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து நடத்தும் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 40-க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடத்தவுள்ளனா். இந்த முகாமில் புதிய நிறுவனங்கள் கலந்து

கொண்டு பயிற்சியாளா்களை தோ்வு செய்யலாம். இதில் ஐடிஐ-ல் பயிற்சி முடித்தவா்கள், 8 ஆம் வகுப்பு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, பட்டம் பெற்றவா்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04575-290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94990-55781 என்ற செல்லிடப் பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT