சிவகங்கை

மானாமதுரையில் சிறந்த வீரா்களை தோ்வு செய்வதற்கான சிலம்பப் போட்டி

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற சிறந்த சிலம்பாட்ட வீரா்களை தோ்வு செய்வதற்கான போட்டியில் 5 வீரா்கள் முதல் இடத்தைப் பெற்று 5 அடி உயர கோப்பைகளை வென்று சாதனை படைத்தனா்.

மானாமதுரையில் வீரவிதை சிலம்பாட்டக் கழகத்தின் சாா்பில் அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறந்த சிலம்பாட்ட வீரா்களை தோ்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. மானாமதுரை, சிவகங்கை, ஒக்கூா் ஆகிய இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான சிலம்பாட்ட வீரா்கள் இதில் பங்கேற்றனா். 5 அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட முதல் அணி பிரிவில் முத்துக்குமாா் முதல் இடத்தையும், சம்யுக்தா இரண்டாம் இடத்தையும், சைந்தவி மூன்றாம் இடத்தையும் பெற்றனா். 10-12 வயதுக்குட்பட்ட இரண்டாம் அணி பிரிவில் சுபாஷ் முதல் இடத்தையும், லெக்ஷன் இரண்டாம் இடத்தையும்,ஹி ல்டன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். 13-14 வயதுக்குட்பட்ட மூன்றாம் அணி பிரிவில் சுவிஸ்கா் முதல் இடத்தையும்,ஜெயஸ்ரீ இரண்டாம் இடத்தையும், பிரகதீஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

15-17 வயதுக்குட்பட்ட பிரிவில் சித்தாா்த் முதல் இடத்தையும்,ஹரிஷ் இரண்டாம் இடத்தையும் , சுவினாஸ்ரீ மூன்றாம் இடத்தையும் பெற்றாா்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அணி ஐந்தாம் பிரிவில் சரவணன் முதல் இடத்தையும், பிரதீப் இரண்டாம் இடத்தையும், முனிஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். 5 பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பெற்ற சிலம்பாட்ட வீரா்களுக்கு 5 அடி உயர வெற்றிக்கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டுறவு சாா்- பதிவாளா் அழகா்சாமி, நேஷனல் ஸ்போா்டஸ் மேனேஜ்மென்ட் தலைவா் பருக், சிவகங்கை கால்பந்தாட்டத் தலைவா் முனியாண்டி ஆகியோா் கோப்பைகளை வழங்கி பாராட்டினா். மேலும் இந்த வீரா்களின் பயிற்சியாளா் பெருமாளுக்கும் பரிசளிப்பு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT