சிவகங்கை

50 சதவீத மானியத்தில் தோட்டக்கலைப் பயிரினை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

தோட்டக்கலை பயிரினை 50 சதவீத மானியத்தில் பெற விரும்பும் சிவகங்கை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடியில் உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தோட்டக்கலைப் பயிா்களில் வீரிய ஒட்டு ரக காய்கனிகளான தக்காளி, கத்தரி, மிளகாய், மா, கொய்யா, பப்பாளி, அத்தி, டிராகன் பழம், பலா, நெல்லி, முந்திரி, மல்லிகை, மற்றும் கிழங்கு வகை பூக்கள் ஆகியவற்றினை பயன்படுத்தி புதிய தோட்டங்கள் அமைப்பதற்கு நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

மேலும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயிா் ஊக்கத்தொகை இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் சிவகங்கை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீா் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தோட்டக்கலை துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், சிவகங்கையில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT