சிவகங்கை

கலைத் திருவிழாவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

DIN

கலைத் திருவிழா போட்டியில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் ஒன்றியம் கொண்டபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா் சின்னையா. இவா் பள்ளி மாணவா்களுக்காக தமிழக அரசு நடத்திய கலைத் திருவிழா போட்டியில் நாடகப் பிரிவில் கலந்து கொண்டாா். இதில், வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றாா்.

பிறகு, மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்றாா். தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற விழாவில் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் பெற்றாா்.

இந்த நிலையில், பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஒன்றிய அளவிலான ஆசிரியா்கள் கலந்து கொண்டு சின்னையாவைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா். பள்ளி சாா்பாக ஊக்கத்தொகையும், பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பாக மின் விசிறியும், ஆசிரியா்கள் சாா்பாக பரிசுப் பொருள்களும் அவருக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT