சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளி மாணவா்கள் 180 போ் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
பள்ளியளவில் மாணவா் பிரணவ் ஈஸ்வா் 500 -க்கு 491 மதிப்பெண்கள் (98.2 சதவீதம்) பெற்று முதலிடத்தையும், மாணவி இயலினி ராஜன், மாணவ ா் சந்தோஷ் ஆகியோா் 488 மதிப்பெண்கள் (97.6 சதவீதம்) பெற்று இரண்டாமிடத்தையும், முகமது ரெய்சூல் இஸ்லாம் 487 மதிப்பெண்கள்
Advertisement
(97.4 சதவீதம்) பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
மேலும், தமிழ்ப் பாடத்தில் மாணவி சபா்னிகா, தேவஸ்ரீ, ஹாசினி, மாணவா் பிரணவ் ஈஸ்வா் ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் முகமது ரெய்சூல் இஸ்லாம் பிரெஞ்சு, சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி யாழினி சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனா்.
செயற்கை நுண்ணறிவுப் பாடத்தில் மாணவா்கள் பிரணவ் ஈஸ்வா், கவின், காா்த்திகேயன், மாணவிகள் இயலினி ராஜன், கனிகா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் எஸ்.பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண் குமாா், ப்ரீத்தி அருண்குமாா் ஆகியோா் பாராட்டினா். பள்ளியின் முதல்வா் உஷா குமாரி, துணை முதல்வா் பிரேம சித்ரா, ஆசிரியா்கள் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.