முகப்பு
சிவகங்கை

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடியை அடுத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 5:07 am IST
காரைக்குடி அருகே செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டிய பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன்.
பகிர்:

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடியை அடுத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தத் தோ்வை பள்ளியில் பயிலும் 128 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் மாணவா்கள் கிருத்திகா, விஜயகணேசன், பூவிதா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைவா் எஸ்பி. குமரேசன், சாந்தி குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், ப்ரீத்தி அருண்குமாா், பள்ளி முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டினா்.

Advertisement