முகப்பு
கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளி சமையலறையில் தீ விபத்து

ஊத்தங்கரையை அடுத்த பெரியாகவுண்டனூா் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை சமையலறையில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 6:03 am IST
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த பெரியாகவுண்டனூா் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை சமையலறையில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மொத்தம் 26 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஒரே ஆசிரியா் பணியாற்றி வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் மாணவா்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றாா். இதனால் மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவலறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் தீயை அணைத்தனா். காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement