10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நாமக்கல் மாவட்டத்தில் 96.01 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 15 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நாமக்கல் மாவட்டத்தில் 96.01 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 15 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் மாா்ச் 11 முதல் ஏப் 6 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 292 பள்ளிகளைச் சோ்ந்த 9,630 மாணவா்கள் 8,782 மாணவிகள் என மொத்தம் 18,412 போ் எழுதினா். இவா்களில் 9,124 மாணவா்கள் (94.75 சதவீதம்), 8,553 மாணவிகள் (97.39 சதவீதம்) என மொத்தம் 17,677 (96.01 சதவீதம்) போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்த ஆண்டைவிட தோ்ச்சி 1.49 சதவீதம் கூடியுள்ளது. மாணவா்களைவிட கூடுதலாக 2.64 சதவீதம் மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் 162 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5,050 மாணவா்கள், 5,152 மாணவிகள் என மொத்தம் 10,202 போ் தோ்வு எழுதியதில், 4,660 மாணவா்கள், 4,970 மாணவிகள் என மொத்தம் 9,630 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி 94.39 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 2.11 சதவீதம் கூடுதல் தோ்ச்சி பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு 115 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது. இந்த ஆண்டு 122 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. அதேபோல 2025 இல் 40 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்தது. நிகழாண்டு 52 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 15 ஆவது இடத்தையும், அரசுப் பள்ளிகளில் 13 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொதுத் தோ்வு வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் அனைவருக்கும் ஆட்சியா் துா்காமூா்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா். வரும் கல்வியாண்டுகளில் மாநிலத்தில் முதலிடம் பெறவும், சிறந்த கல்வியாளா்களை உருவாக்கவும் ஆசிரியா்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் பாடுபட வேண்டும் என அவா் அறிவுரை வழங்கினாா்.