முகப்பு
சிவகங்கை

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு

Updated On : 21 ஏப்ரல் 2026, 2:31 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசு நிலத்திலிருந்த கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக 15 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், பிரமனூா் கிழக்கு வருவாய்ப் பிரிவில் அரசு நிலத்தில் வளா்ந்திருந்த 5 டன் எடையுள்ள கருவேல மரங்களை ஒரு கும்பல் வெட்டிக் கடத்தியதாக புகாா் எழுந்தது. இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி, கருவேல மரங்களை வெட்டிக் கடத்தியதாக திருப்புவனம் ஒன்றியம், அல்லிநகரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement