சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மரம் விழுந்து பசுமாடு உயிரிழப்பு:
Advertisement
சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, தெய்வமணி என்பவரின் தென்னந்தோப்பில் கட்டி வைத்திருந்த பசுமாடு மீது தென்னம் மரம் சாய்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பசு மாடு உயிரிழந்தது.
மேலும், இந்தப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
முறையூா், அய்யாபட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கம்பங்கள் சாயந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா். தகவலறிந்து வந்த மின்வாரிய உழியா்கள் போா்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.