முகப்பு
தேனி

தேனியில் பெண்கள் இயக்கம் அமைதி ஊர்வலம்

தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:16 am IST
பகிர்:

தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
 தேனியில் பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலில் இருந்து மாவட்டத் தலைவர் அருள்மொழி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். மதுரை சாலை, பங்களாமேடு திடல் வரை ஊர்வலம் நடைபெற்றது. சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது ஆகியவற்றை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.