தேனி

சுடுகாட்டுக் கூரை அமைத்து தர வலியுறுத்தல்

DIN

போடி பொட்டல்களம் கிராமத்தில் சுடுகாட்டுக் கூரை அமைத்து தரவேண்டும் என, விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
போடி அருகே போ.மீனாட்சிபுரம் பேரூராட்சிக்குள்பட்ட கிராமம் பொட்டல்களம். இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இக்கிராமத்துக்கென தனியாக மயானம் உள்ளது.     பேரூராட்சிக்குச் சொந்தமான மயானத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சுடுகாட்டுக் கூரை அமைக்கப்பட்டது. தற்போது, இந்தக் கூரை முழுவதும் சேதமடைந்து அழிந்துவிட்டது. மேலும், மயானம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது.     இதனால், மழை, வெயில் காலங்களில் மயானத்துக்குச் சென்று இறுதிச் சடங்குகள் செய்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இங்கு சுடுகாட்டுக் கூரை அமைத்து தரவேண்டும் என்றும், மயானத்தில் உள்ள புதர் செடிகளை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்றும், இக்கிராமத்தில் உள்ள விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT