தேனி

கௌரவ ஊக்கத் தொகை பெற பிப். 27-க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாத விவசாயிகள், பிப்.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. 
5 ஏக்கருக்கும் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கௌரவ ஊக்கத் தொகை பெறுவதற்கு தங்களது நிலத்தின் பட்டா,  குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புத்தக முதல் பக்க நகல் மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம்,  வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைப் பிரிவு அலுவலகத்தில் பிப்.27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT