தேனி

பெரியகுளத்தில் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: இளைஞர் பலி

DIN

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதியதில், இளைஞர் உயிரிழந்தார். 
         பெரியகுளம், முனிசிபல் காலனியை சேர்ந்த ராசு மகன் சுப்பிரமணி (28).  ஆட்டோ ஓட்டுநரான இவர், திங்கள்கிழமை இரவு வடுகபட்டிக்கு சென்றுவிட்டு பெரியகுளம் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பெரியகுளத்திலிருந்து ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற மற்றொரு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
       விபத்தை ஏற்படுத்திய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான ரெங்காபுரத்தைச் சேர்ந்த முருகவேல் மற்றும் இருவர் தப்பியோடிவிட்டனராம். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT