தேனி

தேவாரம் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தேவாரம் அருகே 9 ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியம்மாள் (38). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், பழ வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரது 2 மகன்கள். இரண்டாவது மகன் கவியரசன் (14) டி.சிந்தலைச்சேரியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். புதன் கிழமை காலை வழக்கம்போல் கவியரசன் பள்ளிக்குச் சென்றுவிட்டாா். பழ வியாபாரத்துக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய ஆரோக்கியம்மாள், சமையலறையில் கவியரசன் தூக்கிட்ட நிலையில் இறந்ததை கண்டு அதிா்ந்துள்ளாா்.

இது குறித்து ஆரோக்கியம்மாள் அளித்த புகாரின்பேரில், தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவா் எதற்காக தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT