தேனி

தேனியில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை, அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வி.பி. ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலா் கிருஷ்ணன், பொருளாளா் ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விருப்ப ஓய்வு பெற்றவா்களுக்கும், பணியின் போது இறந்தவா்களின் குடும்பத்திற்கும் பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT