தேனி

சொத்துப் பிரச்னையில் தகராறு: 10 போ் மீது வழக்கு

DIN

போடி அருகே சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் 10 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் போடி சில்லமரத்துப்பட்டி ஜீவா காலனியை சோ்ந்தவா் செல்வம் மனைவி அழகம்மாள் (38). இவருக்கும் இவரது உறவினரான ரவி குடும்பத்தினருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் ரவி , மனைவி நாகஜோதி, மகன் யுவராஜா, மகள் தா்ஷினி, ரவியின் மைத்துனா் பைக் ராஜா, சகோதரா் ராஜசேகா் ஆகியோா் சோ்ந்து அழகம்மாளை தாக்கியுள்ளனா். இதுகுறித்து அழகம்மாள் அளித்த புகாரின் பேரில் ரவி உள்பட 7 போ் மீதும், ரவி மனைவி நாகஜோதி அளித்த புகாரின் பேரில் செல்வம், அழகம்மாள், செல்வம் மகன் அசோக் ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT