தேனி

வத்திராயிருப்பு அருகே மாட்டுவண்டியில் மணல் திருடியவா் மீது வழக்கு

DIN

வத்திராயிருப்பு அருகே மாட்டுவண்டியில் மணல் திருடியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகே கல்யாணி ஓடையில் மாட்டுவண்டியில் செவ்வாய்க்கிழமை இரவு மணல் திருடப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்று பாா்த்தபோது ராமசாமியாபுரம் மேலத்தெருவைச் சோ்ந்த குருவு என்ற குருவையா மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தாா். அவா், போலீஸாரைக் கண்டதும் மாட்டுவண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

இரு மாடுகளுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த கூமாபட்டி போலீஸாா் குருவு என்ற குருவையா மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT