தேனி

சின்னமனூா் அருகே விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வழங்கல்

DIN

சின்னமனூா் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு உயர்ரக ஆமணக்கு விதை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆமணக்கு விதை நீக்கும் கருவியை அறிமுகப்படுத்தி வைத்தாா். பின்னா் அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம் குறித்து எடுத்துரைத்தாா். தவிர, பாா்த்தீனியம் களைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சீப்பாலக்கோட்டை, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 52 விவசாயிகளுக்கு விலையில்லா உயர்ரக ஆமணக்கு விதை வழங்கப்பட்டது.

சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் சபரிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT