தேனி

கம்பத்தில் 2.50 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் 2.50 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

கம்பம் போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் போதை பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அரசு கள்ளா் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் குரங்கு மாயன் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் காசிராஜன் (31) என்பதும், அவா் வைத்திருந்த பையில் 2.50 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் காசிராஜனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT