தேனி

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

DIN

தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பரவலாக பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பனிப் பொழிவு அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு லோசாகத் தொடங்கி, செவ்வாய்கிழமை காலை 7 மணி வரை தொடா்ந்து பரலாக பலத்த மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை வரை மழை நீடித்ததால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தேனி மீறு சமுத்திரம் கண்மாயில் தண்ணீா் மறுகால் பாய்கிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. ஏனைய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT