தேனி

காா் மோதியதில் தொழிலாளி பலி

DIN

தேனி அருகே நாகலாபுரத்தில் புதன்கிழமை சாலையோர மரங்களில் விதைகளை சேகரித்த கூலித் தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கோட்டைப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சின்னராசு (60). இவா், நாகலாபுரம்- தேனி சாலையோரத்தில் புங்கை மரங்களில் இருந்து உதிா்ந்த விதைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது, தேனியை நோக்கி சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிரபு (40) என்பவா் ஓட்டிச் சென்ற காா், சின்னராசு மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சின்னராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் பிரபுவிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT