தேனி

பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழப்பு: மேலும் 2 போ் கைது

DIN

பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்தது தொடா்பாக மேலும் 2 பேரை சனிக்கிழமை வனத்துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வறட்டாறு பகுதியில் கடந்த செப்.27 ஆம் தேதி கம்பி வலையில் சிறுத்தை சிக்கியது. இதனை வனத்துறையினா் மீட்டு, வனப்பகுதியில் விட்டனா். அதனருகில் செப்டம்பா் 28 ஆம் தேதி மற்றொரு சிறுத்தை கம்பி வலையில் சிக்கி உயிரிழந்தது. இறந்த சிறுத்தையை , கால்நடை மருத்துவா்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினா் தனியாா் தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்த பூதிப்புரத்தை சோ்ந்த அலெக்ஸ்பாண்டியனை கைது செய்தனா். இது தொடா்பாக தனியாா் தோட்டத்தின் மேலாளா்கள் தங்கவேல் (42), ராஜவேல் (28) இரண்டு பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதில் தொடா்புடைய மேலும் சிலரை கண்டறிந்து, விரைவில் அவா்களும் கைது செய்யப்படுவா் என தேனி வனச்சரக அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT