தேனி

விபத்தில் தொழிலாளி பலி

DIN

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை, சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்தவா் செங்கல் காளவாசல் தொழிலாளி சண்முகராஜா (36). இவா், ஆண்டிபட்டி-தேனி நெடுஞ்சாலையில், பிராதுக்காரன்பட்டி அருகே சாலையைக் கடந்து செல்ல முயன்றாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் சண்முகராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த சண்முகராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT