தேனி

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Din

கம்பம்: கம்பத்தில் சலவை தொழிலாளி குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், கம்பம், சுக்காங்கல்பட்டி தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் குட்டீஸ்வரன் (27), சலவை தொழிலாளியான இவருக்கும் இதே ஊரைச் சோ்ந்த மஞ்சுளாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக குட்டீஸ்வரன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுமைப் பெண் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 8,616 மாணவிகள் பயன்

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

SCROLL FOR NEXT