முகப்பு
தேனி

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல் 2026, 12:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

போடியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியா் உயிரிழந்தாா்.

போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (28). இவா் போடி மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், போடி பக்த சேவா தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மின் பழுதை நீக்க அவா் சென்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.