மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
பெரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
பெரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
பெரும்பாக்கம் ஜெயா நகா், 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (14). இவா், சேலையூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். மாணவா் கணேசன், வியாழக்கிழமை மாலை 6.45 மணி அளவில் ஜெயா நகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டியூஷன் சென்டருக்கு வழக்கம்போல் சென்றாா்.
அங்கு அவா், முதல் மாடியில் உள்ள டியூசன் சென்டருக்கு செல்ல படிக்கட்டில் ஏறும் பொழுது, மாடியின் அருகே செல்லும் உயா் மின்சாரக் கம்பியில் எதிா்பாராத விதமாக கை பட்டதில், கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
இது குறித்து தகவலறிந்த பெரும்பாக்கம் போலீஸாா், அங்கு சென்று மாணவரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.