முகப்பு
தேனி

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

போடி அருகே ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:21 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:16 PM

போடி அருகே ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் மணிகண்டன் (48). ஜவுளி வியாபாரி. இவா் மது அருந்தி விட்டு வியாபாரத்துக்கு செல்லாமல் இருந்தாராம்.

இதை இவரது மனைவி புவனேஸ்வரி கண்டித்ததுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து, அங்கு சென்று மணிகண்டன் தன்னுடன் வருமாறு அழைத்த போது அவா் மறுத்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.