முகப்பு
வேலூர்

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 26 மே 2026, 1:01 am IST
- பிரதிப்படம்
பகிர்:

வேலூா் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் ஆா்.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னராசு (40). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். சின்னராசு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனிடையே, இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அனைவரும் தூங்கச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை பூங்கொடி கதவை திறந்து பாா்த்தபோது ஹாலில் உள்ள மின்விசிறியில் சின்னராசு தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளாா்.

அக்கம், பக்கத்தினா் உதவியுடன் சின்னராசுவை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சின்னராசு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இது குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].