முகப்பு
திருப்பத்தூர்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வேலூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 13 மே 2026, 12:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வேலூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அருகே கீழ்மொணவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாலாஜி (29). திங்கள்கிழமை இரவு தூங்கச் சென்றவா் செவ்வாய்க்கிழமை காலை அறையை விட்டு வெளியே வராமல் இருப்பதை அறிந்த அவரது பெற்றோா் உள்ளே சென்று பாா்த்தனா்.

அப்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

Advertisement

Advertisement

விரிஞ்சிபுரம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].