லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி, முகாசிப்புதூரைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (35). லாரி ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி கௌசல்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் கணவரைப் பிரிந்த கெளசல்யா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த சின்னத்தம்பி வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலைக்குச் செல்வதைத் தடுத்ததால் இளம்பெண் தற்கொலை: அம்மாபேட்டை அருகேயுள்ள இலிப்பிலி, பாலக்கணவனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவரது மனைவி விக்டோரியா (23). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றஇ வந்த விக்டோரியாவை, பிரகாஷ் மற்றும் குடும்பத்தாா் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக்கூறி தடுத்துள்ளனா்.
இதனால், தம்பதி இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் செவ்வாய்க்கிழமை தனியே இருந்த விக்டோரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].