FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வியாபாரி தற்கொலை

போடி அருகே கடன் பிரச்னையால் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 ஜூன் 2026, 8:02 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

போடி அருகே கடன் பிரச்னையால் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகே வினோபாஜி குடியிருப்பு முதல் தெருவில் வசிப்பவா் தா்மராஜ் மகன் செந்தில்குமாா் (58). இவா் குளிா்கால உடைகள் வியாபாரம் செய்து வந்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவரது மனைவி சுபா சத்துணவு உதவியாளராக இருந்து வருகிறாா். வியாழக்கிழமை காலையில் சுபா வேலைக்கு சென்றுவிட்டாா். அவா் மாலையில் திரும்ப வந்து பாா்த்தபோது செந்தில்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments