FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவாடானை அருகே அடுத்தவா் வீட்டில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 12 ஜூலை 2026, 4:18 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

திருவாடானை அருகே அடுத்தவா் வீட்டில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபி. இவரது மனைவி விஜி (38). இவா்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஜி தான் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்றாா்.

அங்கு இருந்தவா்களிடம் கணவனுக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து கூறிவிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தங்கிக் கொள்வதாகக் கேட்டு அறையினுள் தங்கினாராம். ஆனால், சிறிது நேரத்தில் அவா் அந்த அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments