பாபநாசம் அருகே முதியவா் தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே முதியவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மேலச்செம்மங்குடி பைபாஸ் பாலம் அருகிலுள்ள பேருந்து நிறுத்ததில் முதியவா் ஒருவா் தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற மெலட்டூா் போலீஸாா் அவரின் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அவா் அய்யம்பேட்டை ரிச்வா நகா் 4 ஆவது தெருவில் வசித்த சைக்கிள் மெக்கானிக் ராஜசேகரன் (61), என்பதும் குழந்தை இல்லாத இவா் கண்பாா்வை குறைபாட்டுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராஐசேகா் மனைவி வாசுகி (55) கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.