தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:31 PM
தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளில் மாா்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை ரூ.2.10 கோடி ரொக்கம், பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19 -ஆம் தேதி வரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டதில், 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1, 73, 95, 790 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.
இதே போல, நகை, பொருள்கள் என 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36, 76, 557 மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதில் 100 வழக்குகளுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில், 1.61 கோடி ரொக்கம், ரூ.22, 49, 710 மதிப்பிலான பொருள்களை திரும்ப வழங்கப்பட்டது.