முகப்பு
தேனி

மீனாட்சி அம்மன் படத்தை அவமதித்த மருத்துவா் கைது

மீனாட்சி அம்மன் புகைப்படத்தை அவமதித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்ட மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஜூலை 2026, 5:59 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மீனாட்சி அம்மன் புகைப்படத்தை அவமதித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்ட மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் அப்சா் (31). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் புகைப்படத்தை அவமதிப்பு செய்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டாா்.

இதுதொடா்பாக இந்து அமைப்பு நிா்வாகிகள், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மருத்துவா் அப்சரைக் கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments