தேனியில் கெட்டுப் போன 8 கிலோ இறைச்சி பறிமுதல்
தேனியில் கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனியில் கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள், கெட்டுப் போன உணவுப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, தேனி மாவட்ட நியமன அலுவலா் ஆா். சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலா் லிங்கம் ஆகியோா் வியாழக்கிழமை மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் ஆய்வு நடத்தினா். அப்போது, கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தேனி பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement