சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தேனியைச் சோ்ந்தவா் பிரபு (31). கூலித் தொழிலாளி. இவா், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து தேனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கடந்த 29.9.2020 அன்று கைது செய்தனா்.
இந்த வழக்கு, தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எழில், பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement