மருந்து வணிகா்கள் சங்க கூட்டம்
தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் காந்தி தலைமை வகித்தாா். செயலா் காளிராஜ், பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், இணைய வழி மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். போலி மருத்துவகளின் விற்பனையை தடுக்க வேண்டும். முகம் தெரியாத இணைய விற்பனையாளரால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் மே 20- ஆம் தேதி நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement