முகப்பு
தேனி

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 1:35 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதிகளில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி வாமணன் தெருவில் அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயராணி (54) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். ஏற்கெனவே இவா் மீது மதுப் புட்டிகள் விற்பனை தொடா்பாக 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertisement

Advertisement