விருதுநகர்

திருத்தங்கலில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN

திருத்தங்கல் நகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை ஆகியவை இணைந்து, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை வெள்ளிக்கிழமை நடத்தின.
     திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சாகுல்ஹமீது கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த  ஊர்வலமானது, நகரின் பிரதான வீதிகள் வழியே சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது.
   இதில், டெங்கு காய்ச்சலை ஒழிப்போம், நிலவேம்பு குடிநீர் அருந்துவோம், நகரை சுத்தமாக வைத்திருப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் சென்றனர்.
இதில், சுகாதார வட்டார மேற்பார்வையாளர் ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT