சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு
திருச்சுழி வட்டம், சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சுழி வட்டம், சித்தலக்குண்டு கிராமத்தில் தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
சித்தலக்குண்டு கிராமத்தில் பிரதான வீதியில் தார்ச்சாலை அமைத்து பல ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்நிலையில், உரிய பராமரிப்பில்லாததால், இந்த சாலை சேதமடைந்து, தற்போது, மண் சாலையாக மாறி விட்டது.
இந்த வீதியின் இருமருங்கிலும் இருந்த கழிவுநீர்க் கால்வாய்களும் முற்றிலும் சேதமடைந்து, மண் மூடி விட்டது. இந்நிலையில் இத்தெருவில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வீதியில் சிறுகுட்டைபோல் தேங்கி, பின்னர் அது நிரம்பி அருகிலுள்ள மழைநீர் ஓடைக்குச் செல்கிறது.
இதுபோன்று, தெருவில் வழிந்தோடும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், நோய்த்தொற்று ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி வாந்தி, பேதி, சளி, இருமல் ஆகிய உபாதைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ம.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத்திலும், சித்தலக்குண்டு ஊராட்சியிலும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கழிவுநீர்க் கால்வாய் அமைக்கவும், பிரதான வீதியில் தார்ச் சாலை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.