விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தைப் பகிர்ந்த த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள் பற்றி..
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், ஜூன் 23ஆம் தேதி இரவு, நடிகை த்ரிஷா பகிர்ந்த பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் மிகுந்த வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று முழுக்க த்ரிஷாவின் பதிவில் 00.00 என்று குறிப்பிட்டிருந்தது எதைக் குறிக்கிறது, அதில் இருக்கும் நீல நிறக் கண் எமோஜி கண் திருஷ்டிக்காக வைக்கப்படுவதா என் சமூக வலைத்தங்கள் முழுக்க பேசப்பட்டு வந்தது.
அது மட்டுமா? இன்றும் இதுபற்றித்தான் விதவிதமான பேச்சுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் புகைப்படமே ஒரு செய்யறிவால் உருவாக்கப்பட்ட படம் என்று கூட கருத்துகள் பகிரப்பட்டு அது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
Advertisement
Advertisement
அதனூடே, த்ரிஷா ஏன் ஐந்து விதமான கேக்குகளை வைத்திருந்தார் என்ற கேள்வி எழுந்து, அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக விஜய் உடன் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார். தற்போது ஐந்தாவது பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடுவதால்தான் அதனைக் குறிக்கும் வகையில் ஐந்து கேக்குகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கேக்குகள். அதில் ஒன்றுதான் மேங்கோ கேக். கேக் வகைகளில், மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே, அதுதான். வழக்கமான கேக் போன்று தயாரிக்கப்பட்டு அதன் மீது உண்மையான மாம்பழத் துண்டுகளை சேர்த்து நிறைவு செய்கிறார்கள் இந்த வகை கேக்கை. தற்போது நாடு முழுவதும் இந்த வகைக் கேக்குக்குத்தான் அதிக டிமேண்டாம்.
இந்த மேங்கோ கேக் செய்வது எப்படி? அதனை எங்கே வாக்கலாம் என்பது போன்ற விடியோக்கள்தான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதாவது நல்ல தரமான மாம்பழத்தைக் கூழாக்கி, கேக்குகளுக்கு இடையில் அதனை பரப்பிவிட்டு, இப்படியே கேக் துண்டுகளை அடுக்கி நிறைவாக, அதே மாம்பழக் கூழ் மீது சில துண்டு மாம்பழங்களையும் சேர்த்தால் அருமையான மேங்கோ கேக் தயாராம்.
மாம்பழம் பிடிப்பவர்களுக்கு இந்த கேக்கும் பிடிக்கலாம்.
Vijay's birthday photo Cake varieties made famous by Trisha's post!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.