விருதுநகர்

சிவன் கோயில்களில்  பிரதோஷ பூஜை

DIN

ராஜபாளையம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 
    தொடர்ந்து, தெற்குவெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், மாயூரநாதசுவாமி திருக்கோயில் அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT