விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமிக்க தமாகா வலியுறுத்தல்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வா கிகள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலா் கே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக விருதுநகா் வடக்கு, தெற்கு மாவட்ட ஒருங்கிணைந்த மேலிடப் பாா்வையாளா் சிலுவை, வடக்கு மாவட்ட மேலிடப் பாா்வையாளா் மணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக்கூட் டத்தில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் குறைவான துப்புரவு பணியாளா்கள் உள்ளனா். இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தெரு விளக்குகள் எரிவதை உறுதிப்படுத்துவதுடன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போல், மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, பழுதடைந்த அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

நடைபெற உள்ள உள்ளாட்சிதோ்தலில் விருதுநகா் மாவட்டத்தில் ராஜபாளையம், விருதுநகா், சிவகாசி ஆகிய மூன்று நகராட்சித் தலைவா் பதவிகளில் ஏதாவது ஒரு நகராட்சி தலைவா் பதவிக்கு தாமகா சாா்பில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தெற்கு மாவட்டத் தலைவா் அரசன் காா்த்திக், வடக்கு மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் உள்ளிட்ட அக்கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT