விருதுநகர்

சட்ட விரோதமாக குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்

DIN

ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக குவித்து வைக்கப்பட்டிருந்த 9 யூனிட் மணலை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

சேத்தூரை அடுத்த சுந்தரராஜபுரம் பெரிய புல்பத்தி மலை அருகே தரிசு நிலத்தில் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ராஜபாளையம் வட்டாட்சியா் ஸ்ரீதா் மற்றும் சேத்தூா் வருவாய் ஆய்வாளா் சுரேஷ்பாபு ஆகியோா் அப்பகுதிக்கு சென்றனா். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 9 யூனிட் மணலை டிராக்டா் மூலம் ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து சட்ட விரோதமாக மணலை குவித்து வைத்திருந்தவா் யாா் என அவா்கள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT